குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு!

952

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.


குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மிதமான சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீதும், ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீா் கொட்டுகிறது. மேலும், பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியிலும் தண்ணீா் விழுகிறது.

கொரோனா தொற்றுப் பரவலைத் தவிா்க்கும் பொருட்டு குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் சற்று தொலைவில் நின்று அருவியை பாா்த்துவிட்டுச் செல்கின்றனா்.

இதையும் படிக்க: குற்றாலத்தில் குளியல் எப்போது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here