
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சட்டப்பிரிவு 49(1)ன் படி பட்டியலில் சாராத 8,193 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கான தகுதிகள், நிபந்தனைகள் மற்றும் கோயில் விவரங்கள் அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ (www.hrce.tn.gov.in) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
- அறங்காவலராக தேர்வு செய்யப்படும் நபர் இந்துமதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- கோவிலின் நன்மைக்காக செயல்படும் நற்பண்புடையவராக இருக்க வேண்டும்.
- கோவிலின் நிதி மற்றும் நிர்வாக விஷயங்களில் அறிவுள்ளவராக இருக்க வேண்டும்.
- அரசு அல்லது நீதிமன்றத்தால் தகுதியில்லாத நபராக அறிவிக்கப்படாதவராக இருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம் – https://hrce.tn.gov.in/resources/docs/department/trustee_application.pdf
தகுதியுள்ள நபர்கள் இணையதளம் வழியாக நேரடியாக விண்ணப்பிக்கலாம் அல்லது இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை உரிய ஆவணங்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ விரைவு அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
20.08.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு செய்திகள்




