நெல்லை, தென்காசி: பதிவுத்துறையில் முத்திரைத்தாள் விற்பனையாளர் வேலைவாய்ப்பு!

3619
தென்காசி: பதிவுத்துறையில் முத்திரைத்தாள் விற்பனையாளர் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு பதிவுத்துறையின் கீழ் செயல்படும் சார்பதிவாளர் அலுவலக ஆட்சி எல்லைக்குட்பட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர் (Stamp Vendor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் 2 பணியிடங்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 5 பணியிடங்களும் உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப மனுக்களை சம்மந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 12.02.2021 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமோ சம்மந்தப்பட்ட மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த நியமனங்கள் குறித்து பதிவுத்துறை வெளியிடுள்ள Notification மற்றும் முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Stamp Vendor Notification

விண்ணப்பித்து விட்டீர்களா.. தென்காசி: அம்மா மினி கிளினிக்கில் வேலைவாய்ப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here