பார்வை குறைபாட்டால் வேலை போனது: அரசு பஸ் டிரைவர் தற்கொலை!

808

புளியங்குடியில் கண்பார்வை குறைபாடால் வேலையிழந்த வேதனையில் விஷம் குடித்த அரசு பஸ் டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பாறைகுளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (48). இவர் அரசு போக்குவரத்து கழக புளியங்குடி பணிமனையில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். செல்வகுமாருக்கு கண் பார்வை குறைவு ஏற்பட்டதால் கடந்த ஆறு மாதங்களாக பணி வழங்கப்படவில்லை. இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது.

இதனால் மனமுடைந்த செல்வகுமார் கடந்த 19ம் தேதி விஷம் குடித்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவரது மகன் நவீன் (12) குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு தற்கொலை செய்தார். மகனை தொடர்ந்து தந்தையும் தற்கொலை செய்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்வகுமாருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என்று போக்குவரத்து கழக ஊழியர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


இதையும் படிக்க: செண்பகாதேவி கோயில்; தடைவிதித்த வனத்துறையினர்; பக்தர்கள் ஏமாற்றம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here