தென்காசி கலெக்டர் அலுவலகம் ஆயிரப்பேரியில் கட்டும் திட்டம் கைவிடப்படுகிறதா?

1879

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை மக்கள் நலன் கருதி, நகர எல்லையில் அமைக்க வலியுறுத்தி, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா ஆகிய இருவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த தீர்மானத்திற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ”பலதரப்பட்ட மக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மாற்று இடம் பரிசீலிக்கப்படும்” என உறுதி அளித்தார்.

இதையும் படிக்க: விவசாய நிலத்தில் தென்காசி கலெக்டர் அலுவலகம்; விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here